‘போலீஸ் அடிக்கு முன், அடிக்கு பின்’.. போதை இளைஞர்கள் வைரல் வீடியோ

68பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரி அருகே இரண்டு இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர். தொடர்ந்து, கல்லூரி வளாகத்திற்குள் சென்று அங்கிருந்து மாணவர்களிடம் வம்பிழுத்துள்ளனர். அதில் ஒருவர், "நீ எல்லாம் ஒரு ஆளா.. தூக்கிருவேன்” என தகாத முறையில் பேசியுள்ளார். இதுகுறித்த வீடியோ போலீஸ் கண்ணில் சிக்கிய நிலையில், அந்த போதை இளைஞர்களை தங்களது ஸ்டைலில் போலீஸ் விசாரித்துள்ளனர். அதன் பிறகு தாங்கள் செய்தது மிகப்பெரிய தவறு என மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி