சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக வாழைத் தோட்டங்கள் சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.4 - 8 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதா விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.