Paytm பேமென்ட்ஸ் வங்கிப் பணப்பரிவர்த்தனைகளை மார்ச் 15 வரை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. பிப்ரவரி 29ம் தேதியுடன் இந்நிறுவனத்தின் வங்கி சேவையை நிறுத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கி விதிமுறை மீறல்கள் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இதன் செயல்பாடுகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.