பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்பதுதான் பிரச்னை. கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் கட்ட எந்த பிரச்னையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அரசு அனுமதியுடன் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.