கோரிக்கைகளை நிறைவேற்றுங்க! சாலையில் குவிந்த பெண்கள்

4024பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலணிக்குழி குடிகாடு கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தூர்வாரும் பணிகளில் மணல் கொள்ளை நடப்பதாகவும், விவசாய நிலத்திற்கு பாதை வசதி மற்றும் மலட்டு ஏரி அருகே மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை வைத்தும் விடியா அரசு நிறைவேற்றததால், ஆத்திரமடைந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மேலனைகுழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டு நின்றனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் அதற்குள் தங்களது கோரிக்கை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், மறியல் போராட்ட  முயச்சியை உடனடியாக கைவிட்டு அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர். இரண்டு தினங்களில் கோரிக்கை நிறைவேற்றா விட்டால் அடுத்த கட்டமாக போராட்டம் கடுமையாக இருக்கும் என அரசுக்கு பெண்கள் எச்சரிக்கை செய்தனர். இச்சம்பவம் காரணமாக மேலணிக்குழி குடிகாடு பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி