குளித்துக் கொண்டே லாரி ஓட்டும் நபர்.. வைரல் வீடியோ

21374பார்த்தது
நாடு முழுவதும் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. காலை 9 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து மக்களை அலறி ஓடச் செய்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது, ஓட்டுநர் ஒருவர் லாரி ஓட்டிக் கொண்டே, ஒருகையால் குளித்துக் கொண்டே செல்லும் காட்சி வைரலாகி வருகிறது. லாரி கியர் பாக்ஸ் அருகே அண்டாவில் குளிர்ந்த நீரை நிறைத்து வைத்துக்கொண்டு, அதனை தலையில் ஊற்றிக் குளித்தபடியே விபரீத முயற்சியில் ஈடுபடுகிறார்.

ஆபத்தான முறையில் இது போன்று லாரியை இயக்கி, சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸ் வாங்குவதற்காக இப்படி அவர் செய்திருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி