புரட்சி தமிழர் எடப்பாடியாரின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அதிமுக கழக நிர்வாகிகள் உதவி வருகின்றனர். அந்த வரிசையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா. பழூர் கடைவீதியில் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான திரு. தாமரை. எஸ். ராஜேந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், ஒன்றிய கழகச் செயலாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.