இளைஞர் கொடூரக் கொலை - மேலும் ஒருவர் கைது

4004பார்த்தது
இளைஞர் கொடூரக் கொலை - மேலும் ஒருவர் கைது
திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர் இவர் முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ஆவார். இவர்கள் கேபிள் தொழில் செய்து வருகின்றனர். பன்றியும் வளர்த்து வருகின்றனர் கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் (வயது 27). டிப்ளமோ இன்ஜினியர்.

இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன் முத்துக்குமாரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முபாரக் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி