கலப்படம் கலந்த உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முதலில் அதை பறிமுதல் செய்வார்கள். பின்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்படும். 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், அபராதம் அல்லது கடைக்கு சீல் வைக்கப்படும். மீண்டும் சம்பந்தப்பட்ட நபர் கலப்படம் செய்வதில் ஈடுபட்டால், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை பரிந்துரைக்கப்படும். கடையை நிரந்தரமாக மூடுவதோடு சிவில் கோர்ட் மூலம் சிறை தண்டனை மற்றும் அபராதம் வசூலிக்கப்படும்.