ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகுவதாக ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து விலகி, புகழேந்தி, கே.சி.பழனிசாமியுடன் இணைந்து "அதிமுக ஒருங்கிணைப்புக் குழு"- வை தொடங்கியுள்ளார். அதிமுகவை யாரோ அழிக்கப்பார்கிறார்கள் என புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக VS
பாஜக என இருந்ததை
திமுக VS
பாஜக என கொண்டு வந்துவிட்டார்கள். இதனை பொறுமையாக பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை என புகழேந்தி கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்