"தமிழக மக்கள் நல்வாழ்வில் அமித்ஷாவிற்கு அக்கறை உள்ளது"

81பார்த்தது
"தமிழக மக்கள் நல்வாழ்வில் அமித்ஷாவிற்கு அக்கறை உள்ளது"
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி X தளத்தில் பதிவிட்டுள்ளார். ராஜ்பவன் X தளத்தில் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கப்பூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி