வான் சாகச நிகழ்ச்சி: தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை - விஜய்

64பார்த்தது
வான் சாகச நிகழ்ச்சி: தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை - விஜய்
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வேதனை தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்நிகழ்ச்சியில், அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளது. இனி வரும் காலங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி