அரசுப்பள்ளி மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி

47088பார்த்தது
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு AI பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வி முறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான AI-ஐ இணைத்து எப்படி கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை நாம் கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த திட்டமானது தொடர்ந்து திருச்சி, கோவை, மதுரை, சென்னையில் புறநகர் பகுதிகளில் உள்ள 40 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் விதமாக விரிவுபடுத்த உள்ளது. பள்ளிக்கல்வி உருமாற்றமும் வழி நடத்தவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி