அகில இந்திய வானொலியில் (AIR) ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்ததாக முதலில் அறிவித்த நபர் புகழ்பெற்ற நடிகர் பூர்ணம் விஸ்வநாதன். சிறந்த நடிகராகப் புகழ்பெற்ற அவர் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். அவர் தனது 18வது வயதில் நாடக மேடையில் நடிக்கத் தொடங்கினார். நாடகக் குழுவில் சேர்ந்து நடித்தார். வறுமையின் நிறம் சிவப்பு, ராஜபார்ட் ரங்கதுரை, மூன்றாம் பிறை, தில்லு முல்லு, வருஷம் 16, கேளடி கண்மணி, ஆசை, மகாநதி போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு உயிரிழந்தார்.