தீவிரவாத தாக்குதலில் பலியான 11 பேர்

65பார்த்தது
தீவிரவாத தாக்குதலில் பலியான 11 பேர்
சில மாதங்களாக ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. காங்கோவில் மீண்டும் தீவிரவாதிகள் தலைதூக்கியுள்ளனர். நேற்று(ஏப்ரல் 14) கிழக்கு காங்கோவில் உள்ள பல கிராமங்கள் தாக்கப்பட்டு 11 பேர் கொல்லப்பட்டனர். தவிர சில வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன இந்த சம்பவம் குறித்து பேசிய உள்ளூர் மேயர் நங்கோங்கோ மயங்கா, “இப்போதைக்கு இறந்தவர்களின் உடல்களை சேகரிக்கும் கட்டத்தில் இருக்கிறோம் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட இருக்கிறது” என தெரிவித்தார்.