20 வருடங்களாக செங்கல், சிமெண்டை சாப்பிடும் பெண்

57பார்த்தது
20 வருடங்களாக செங்கல், சிமெண்டை சாப்பிடும் பெண்
பிரிட்டனில் 20 வருடங்களாக சிமெண்ட், கல், மண் ஆகியவற்றை திண்பண்டமாக சாப்பிட்டு வந்துள்ளார் பாட்ரிஸ் பெஞ்சமின் ராம்க்லோம் என்ற பெண். அவர் 18 வயதில் மணல், சிமெண்ட் மற்றும் செங்கற்களின் பாகங்களை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார். இது தனக்கு சந்தோஷத்தை கொடுப்பதாகவும், உடலுக்கு தீங்கு என தெரிந்தாலும் இந்த பழக்கத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை எனவும் வேதனை. இவ்வகையான நோய் PICA என அழைக்கப்படுகிறது. இந்த சிமெண்ட் மற்றும் செங்கல் உண்ணும் பழக்கத்தை கைவிடுமாறு மருத்துவர் அறிவுறுத்தியதோடு நோயாளிக்கு மருந்துகளையும் பரிந்துரைத்தார்.

தொடர்புடைய செய்தி