புரட்சிக்கான புதிய சகாப்தம் உங்களை அழைக்கிறது - கார்கே

66பார்த்தது
புரட்சிக்கான புதிய சகாப்தம் உங்களை அழைக்கிறது - கார்கே
நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் இன்று தொடங்குகிறது என முதல்கட்ட மக்களவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில், பொருளாதாரத்துக்கு அதிகாரமளித்தல் மற்றும் சம வாய்ப்புகளை வழங்கக்கூடிய புதிய சகாப்தம் உங்களை அழைக்கிறது. கடந்த 10 ஆண்டுகால வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு முடிவு கட்டும் விதமாக, யுவ நீதி மூலம் வேலைப் புரட்சிக்கு வித்திட வாக்களியுங்கள். விவசாய நீதியையும் தொழிலாளர் நீதியையும் நிலைநாட்ட வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி