காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிய 2 பஸ்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. எறையூரில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிவந்த பஸ்சும், நாவலூரிலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அரசு பஸ்சும் வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் மறுபுறம் உள்ள சாலைக்கு திரும்பின. அப்போது ஜல்லி கற்கள் ஏற்றிவந்த லாரி பஸ்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. நவ. 24ஆம் தேதியன்று நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.