கொட்டும் மழையில் விடிய விடிய நடந்த கறி விருந்து

84பார்த்தது
கொட்டும் மழையில் விடிய விடிய நடந்த கறி விருந்து
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தருமத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழா நடைபெற்றது. நேற்று (அக்.13) இரவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்வு நடைபெற்றது. இதில், கோயில் முதன்மைகாரர்கள் உள்ளிட்ட ஆண்கள் ஒன்று கூடி கோட்டை கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து படைத்தனர். பிறகு நேர்த்திக்கடனாக நூற்றுக்கணக்கான கிடாய்களை வெட்டி சமைத்து, கொட்டும் மழையிலும் விடிய விடிய கறி விருந்தில் பங்கேற்று சாப்பிட்டனர்.

தொடர்புடைய செய்தி