தண்ணீர் அண்டாவில் மூழ்கி குழந்தை பலி

1087பார்த்தது
தண்ணீர் அண்டாவில் மூழ்கி குழந்தை பலி
ஆவடி அடுத்த மோரை ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் முரளி. ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி கங்கம்மாள். இவர்களுக்கு ஜீவானந்தம் என்ற பெயரில் ஒன்றரை வயது மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கங்கம்மாள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது விளையாடி கொண்டிருந்த குழந்தை ஜீவானந்தம் வீட்டின் அருகில் குளியலறையில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த அண்டாவில் தலைக் குப்புற கவிழ்ந்து மூழ்கியுள்ளார். அப்போது கண்விழித்த கங்கம்மாள் குழந்தையை தேடியுள்ளார். அப்போது குழந்தை நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி