மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியாக அதிகரிப்பு

66பார்த்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அங்கிருந்து 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி