“கொட்டும் மழையிலும் மதுக்கடை தேவையா?" - அன்புமணி கேள்வி

84பார்த்தது
“கொட்டும் மழையிலும் மதுக்கடை தேவையா?" - அன்புமணி கேள்வி
தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் மட்டும் இயங்குவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு துறை, பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டியதன் தேவை என்ன?. மழை வெள்ளத்தில் மது குடிக்க செல்வோருக்கு எந்தவித உயிர் சேதமும் ஏற்படாதா?. கொட்டும் மழையிலும் மது கடைகளை திறந்து வியாபாரம் செய்வது ஏன்?” என்றார்.

தொடர்புடைய செய்தி