2014 - 2017 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என்ற நடைமுறைக்காக முந்தைய காலத்தில் நடந்த தேர்வு முறையை கைவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜூலை 7ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது.