திருப்பூரில் மின்னல் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு

60பார்த்தது
திருப்பூரில் மின்னல் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பொன்னேகவுண்டன்புதூர் பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை மாவட்டத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் முருகேசன் (75), என்ற விவசாயி தனது மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்துள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 சினை மாடு உட்பட 3 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்தி