தமிழ்நாட்டில் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை!

59பார்த்தது
தமிழ்நாட்டில் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை!
தமிழ்நாட்டில் வருகிற 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்றைய தினம் கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி