உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில், தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த 21 வயது தலித் பெண், சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார். மருத்துவமனை ஊழியர்களால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவரது உறவினர்கள், அப்பெண் பணியாற்றிய மருத்துவமனையை அடித்து உடைத்து சூறையாடினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.