தமிழகத்தில் மனிதர்களை நாய்கள் கடித்து காயம் ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் தெருநாய்கள் கடித்ததாக சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில், சென்னை கொரட்டூர் பகுதியில் 12 வயது சிறுவனை ராட்வைலர், பாக்சர் வளர்ப்பு நாய்கள் இன்று கடித்து குதறின. இதனால் சிறுவன் வலியால் கதறித் துடித்தார். அவரின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.