மத்திய அரசு அன்னபூர்ணா யோஜனா என்ற திட்டத்தை ஏப்ரல் 1, 2000 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் உணவு கேட்டரிங் தொழிலை தொடங்க விரும்பும் பெண்களுக்கு மட்டுமே. இதன் மூலம் கடனாக ரூ.50,000 பெறலாம். சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு மற்றும் டைனிங் டேபிள்களை இந்தக் கடன் மூலம் வாங்கலாம். இந்தக் கடனுக்கான வட்டி விகிதங்கள் சந்தையைப் பொறுத்து மாறுபடும். கடனை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தக் கடனைப் பெற அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளலாம்.