வான் சாகச நிகழ்ச்சி - வெயில் தாக்கத்தால் 2 பேர் பலி

51பார்த்தது
வான் சாகச நிகழ்ச்சி - வெயில் தாக்கத்தால் 2 பேர் பலி
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்தவர்களில் வெயிலின் தாக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (48) மயக்கமடைந்தும், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) நெஞ்சுவலி ஏற்பட்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 230 பார்வையாளர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி