ரூ. 30 ஆயிரம் வழிப்பறி.. திருநங்கை உட்பட 4 பேர் கைது!

76பார்த்தது
ரூ. 30 ஆயிரம் வழிப்பறி.. திருநங்கை உட்பட 4 பேர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே புக்குளம் காட்டுக்கொட்டாய் பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் இவர் சென்றபோது, வீரசோழபுரம் புறவழிச் சாலையில் அவரை வழிமறித்து அவர் வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் பணத்தைப் பறித்து சென்றதாக 4 பேர் மீது போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், திருநங்கை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி