மின் வேலியில் சிக்கி 40 வயது யானை பலி

62பார்த்தது
மின் வேலியில் சிக்கி 40 வயது யானை பலி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதி குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிருக்கு மின் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், இன்று (அக் 06) அதிகாலை வேளையில், குரும்பூர் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று சுப்பிரமணியம் மக்காச்சோள காட்டுக்குள் புகுந்த போது மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி