முதலை பண்ணையில் சுற்றுலா அதிகாரி ஆய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி முதலைப்பண்ணையில் இன்று (மே 28) மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்த் குமார் ஆய்வு செய்தார். அப்போது முதலைப் பண்ணையில் முதலைகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் முதலைப்பள்ளி எதிரே உள்ள காட்டுப்பதி சுழல் மேம்பாட்டு குழு நடத்தும் கடையிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வனக்காப்பாளர் அன்னபூரணி, திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி