ரயிலில் சிக்கியபடி வந்த இளைஞரின் சடலம்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் (ஜூன் 16) இரவு புறப்பட்டது. நள்ளிரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரெயில் என்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் பிணம் ஒன்று சிக்கியிருந்தது. இதனைக் கண்ட ரெயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு கீழே இறங்கிய ரெயில் என்ஜின் டிரைவர், ரெயிலில் வாலிபர் பிணம் சிக்கி இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ரெயில் என்ஜினில் இரண்டு துண்டாக சிக்கி இருந்த வாலிபர் பிணத்தை மீட்டனர். மேலும் அவரின் கால்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி