போதைக்கு அடிமையாகும் தமிழக சிறுமிகள்

70பார்த்தது
போதைக்கு அடிமையாகும் தமிழக சிறுமிகள்
தமிழகத்தில் ஆண்கள் குறிப்பாக டீன் ஏஜ் வயதில் உள்ள நபர்கள் மட்டுமே போதை மாத்திரைகளை பயன்படுத்தி வந்த நிலையில், அதனை பெண்களும் பயன்படுத்தி வருவதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழு அமைத்து அவர்கள் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதும் போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் 16 முதல் 20 வயது உடைய சிறுமிகள் தவறான பழக்கவழக்கத்தால் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை இழந்துள்ளனர். ஆண் நண்பர்களுடன் இணைந்து போதை மாத்திரைகளை உட்கொள்ளும் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து நாசம் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் 16 வயதுடைய சிறுமிகள் போதை மாத்திரைக்கு அடிமையாகி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி