குமரி உட்பட 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை

74பார்த்தது
குமரி உட்பட 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை இரவு 11.30 மணி வரை கள்ளக் கடல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலைகள் அதிக உயரத்தில் எழும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் கடலோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதுபோல ஏற்படாமல் இருக்கப் படகுகளை இடைவெளிவிட்டு நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி