அதிவேக இரட்டை சதம் விளாசிய ஷஃபாலி வர்மா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்நிலையில், ஷஃபாலி வர்மா இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அவர், 197 பந்துகளில் 23 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உள்பட 205 ரன்கள் குவித்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி