விமானத்தில் சிகரெட் பிடித்த பயணி கைது

61பார்த்தது
விமானத்தில் சிகரெட் பிடித்த பயணி கைது
விமானத்தின் கழிவறையில் ஒரு நபர் சிகரெட் புகைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன் இண்டிகோ விமானம் மும்பைக்கு புறப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கு 50 நிமிடங்கள் இருந்தன. அப்போது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கலீஸ் கஜம்முல் கான் என்ற 36 வயது பயணி, கழிவறைக்குச் சென்று சிகரெட் புகைத்திருக்கிறார். இது சட்டப்படி குற்றம் என்பதால் விமான ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் அந்நபரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி