நிதி நிறுவன மோசடிகள் - நீதிபதி சரமாரி கேள்வி

54பார்த்தது
நிதி நிறுவன மோசடிகள் - நீதிபதி சரமாரி கேள்வி
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த நியோ மேக்ஸ் நிறுவன இயக்குநர்களின் சொத்தை பறிமுதல் செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த விசாரணை இன்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் நடைபெற்றது. அப்போது, “கடந்த காலங்களில் நடந்த நிதி நிறுவன மோசடிகளில் ஒரு ரூபாயாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டு உள்ளதா?. கடந்த 10 ஆண்டுகளில் நிதி மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குகளில் எத்தனை வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது?" என நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி