அப்போது சுரேஷ்குமாரை கீழே தள்ளி கண்ணன் சுரேஷ்குமாரின் கழுத்தில் மிதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சுரேஷ்குமார் மனைவி தமிழரசி கொடுத்த புகாரில் கண்ணனை திருவாடானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூன்று நாட்களாக சிகிச்சையில் இருந்த சுரேஷ்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி திருவாடனை காவல் நிலையத்தார் விசாரித்து வருகின்றனர்.