'தனக்கு தமிழ்நாடு பிடிக்காது என்று சொன்னவர் அண்ணாமலை'

573பார்த்தது
'தனக்கு தமிழ்நாடு பிடிக்காது என்று சொன்னவர் அண்ணாமலை'
திமுக எம்பி கனிமொழி பொதுக்கூட்டத்தில் பேசும்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், அண்ணாமலை கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருந்தபோது நான் தமிழனே இல்லை. எனக்கு தமிழ்நாடு பிடிக்காது என்று சொன்னார். ஆனால் தமிழ்நாட்டின் சலுகைகள் எல்லாம் பெற்றுப் படித்துவிட்டு ஒரு பதவிக்குப் போனதும், தமிழ்நாட்டுக்கு தமிழ் மொழிக்கு தமிழ் மக்களுக்கு எதிராகப் பேசக்கூடிய ஒருவர் தான் இன்றைக்கு பாஜக தலைவராக இங்கே சுற்றிச் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.