திருவாடானையில் தீ குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

60பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சம்பை கிராமத்தை சேர்ந்த  காசிநாதன் மகன் கார்த்திகேயன் இவரது மனைவி ராணி இவர்களுக்கு திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில் வீடு கட்டி வசித்து வந்ததாகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திகேயன் தம்பி 2013ல் விபத்து ஒன்றில் இறந்து விட்டதால் அவரது ஊருக்கு சென்று தங்கி இருந்ததாகவும் கூறினார். அதன் பின்  இங்கு வந்து பார்த்தபோது வீட்டுக்கு செல்லும் பாதையை அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவர் அடைத்து வைத்ததாகவும் பாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளார்.
      
       இந்த பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி  ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் புகார் மனு கொடுத்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதனை தொடர்ந்து கானாட்டாங்குடி குரூப் கிராம நிர்வாக அலுவலரிடம் எடுத்துக் கூறியும் எவ்வித பலனும் இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.   இந்நிலையில் இன்று திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு மனைவியுடன் வந்த கார்த்திகேயன் தான் கொண்டு வந்திருந்த  மண்ணெண்ணெயை தன் தலையில் ஊற்றி தீ பற்றி வைக்க முற்பட்டார். அதனால அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுஅப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி