"நிலப்பயன் தகவல் அமைப்பு" முழுமைத் திட்ட நில உபயோக வகைப்பாடுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக உருவாக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 108 அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், ஈரோடு மாவட்டம், சம்பத் நகரில், கட்டப்படும். ரூ.70 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் மேற்கொள்ளப்படும்.