புனேவில் கடந்த மே 19ஆம் தேதி 17 வயது சிறுவன் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று சாப்ட்வேர் ஊழியர்கள் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து மகனை விடுவிக்க ரத்த மாதிரிகளை மாற்றியதாக தந்தை விஷால் அகர்வாலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தற்போது 17 வயது குற்றவாளியின் தந்தை விஷால் அகர்வாலுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.