மணிப்பூரில் போராட்டத்தில் இறங்கிய காவல்துறை

மணிப்பூரில் மேற்கு இம்பால் மாவட்ட கூடுதல் எஸ்.பி. வீட்டின் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். எஸ்.பியையும் காவலர் ஒருவரும் கடத்தப்பட்டனர். பின் அவர்களை மீது மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் காவலர்கள் .இந்நிலையில் எஸ்.பி. கடத்தப்பட்டதைக் கண்டனம் தெரிவித்தும், ஆயுத கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கக் கோரியும் மாநில காவல்துறையினர் துப்பாக்கிகளை தரையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் சற்று பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி