அதிமுகவுடன் கூட்டணி அமைத்த புரட்சி பாரதம்

50பார்த்தது
அதிமுகவுடன் கூட்டணி அமைத்த புரட்சி பாரதம்
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கவிருப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிடம் ஒரு தொகுதியை கேட்டிருப்பதாகவும் அதுகுறித்து அவர்கள் பரிசீலித்து வருவதாகவும் ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றை புரட்சி பாரதத்திற்கு ஒதுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மேலும் பலப்படும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்தி