எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. மணமகன் கொலை

82பார்த்தது
எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. மணமகன் கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள ஃபுலாட் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிமோகன். இவருடைய மகளை அங்கித் என்பவர் காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஹரிமோஹன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதனையடுத்து அங்கித் வீட்டிற்கு ஆட்களுடன் சென்ற ஹரிமோஹன் அவரை தாக்கியத்துடன் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் அங்கித் மற்றும் ரோஹித் என்ற இருவரும் உயிரிழந்தனர். ஹரிமோகன் மற்றும் ராகுல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.