ஆதார் முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்

55பார்த்தது
ஆதார் முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்
ஆதார் அட்டைகள் இல்லாதபோது, வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம். செயலிழக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாரும் தடுக்க முடியாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஏராளமான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழுவின் குற்றச்சாட்டுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி