இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது விபத்தில் இறந்து போன நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹிமாஞ்சுல் சாஹூ என்பதும் அவர் பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது பேரி கார்டு அமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பள்ளிபாளையம் சேலம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து உடனடியாக மற்றொரு பகுதியில் இருந்த பேரி கார்டுகளை போலீசார் உதவியுடன் பொதுமக்கள் எடுத்து வந்து விபத்து அதிகம் நடக்கும் சாலையில் வைத்தனர்.