முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று வடசென்னை மற்றும் திருவள்ளூர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “மற்றவர்கள் உண்ணும் உணவை கூட பிரதமர் மோடி விமர்சிக்கிறார். உணவு என்பது தனி மனிதரின் விருப்பம். அடுத்தவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்ய முடியாது” என விமர்சித்துள்ளார். சில நாட்களாக மாட்டுக்கறி விவகாரம், ஆடு இறைச்சி சாப்பிடுவதை பிரதமர் விமர்சித்து வந்த நிலையில், முதலமைச்சர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.