அதிமுகவில் இணைந்த 100க்கும் மேற்பட்ட அமமுகவினர்

குமாரபாளையத்தில் அமமுகவிலிருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அமைந்துள்ள அதிமுக தேர்தல் பணிமனையில் குமாரபாளையம் அமமுக முன்னாள் நகர செயலாளர் ஏ.பி.என். அங்கப்பராஜ் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் தாய்க்கழக்கமான அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கட்சியில் இணைந்த அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கமணி கழக துண்டினை அறிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் புருஷோத்தமன், குமாரபாளையம் அதிமுக நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி